Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் நாகேந்திரன் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக தெரிவித்தார். நெல்லையில் நயினாருக்கு கேஸ் ஏஜென்சி இருக்கிறது. இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் எந்த ஒரு ரயில்வே அமைச்சராவது ஒரு ரயில் சேவையை தொடங்கி வைத்திருக்கிறாரா, வெளியுறவுத் துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ சுயேச்சையாக ஏதாவது திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்களா?

nainar nagendran tamil nadu

அனைத்துமே பிரதமரின் பெயரிலேயே நடக்கிறது. இது தனிநபர் ஆட்சி போல உள்ளது. பாஜகவின் உண்மையான கூட்டணி என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவைதான்.

இவர்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசியல் செய்கிறது. தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருப்பதால் இங்கே நடந்த வளர்ச்சியை அவர்கள் செய்ததாக மத்திய அரசு விளம்பரம் செய்து கொள்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 53 சதவீத வாக்குகளைப் பெறும்.

மீண்டும் ஸ்டாலினின் ஆட்சி அமையும் என அவர் தெரிவித்திருந்தார். அவரிடம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன்" என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய். ஒரு முறை சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த 20 நாட்களுக்கு பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும் வகையில் கணினி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நானே கேஸ் சிலிண்டர் டீலர், சிலிண்டர் தட்டுப்பாடு எங்குமே கிடையாது. 20 நாட்களுக்குள் யாருக்காவது சிலிண்டர் தேவைப்பட்டால் உங்களுக்கு நான் தருகிறேன். நீங்கள் எங்கு புக் செய்தீர்களோ அங்கு நான் தருகிறேன். எங்கு வேண்டுமானாலும் நான் தர சொல்கிறேன். ஹோட்டல்களில் உணவு குறைக்கப்பட்டதற்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு என எதிர்க்கட்சியினர் எழுதி போட்டிருக்கலாம். உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடியோ அல்லது கட்டுப்பாடோ எதுவும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

கேஸ் ஏஜென்சி குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்தால் காலி சிலிண்டர்களுடன் அவரது ஏஜென்சியை பலர் முற்றுகையிட்டதாக பொய்யான தகவலும் பரவி வருகின்றன.

ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்கா போரால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என பரவும் வதந்தியால் ஏராளமானோர் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். 20 லிட்டர் கேன்களில் கூட பெட்ரோலை மக்கள் நிரப்பிக் கொண்டு செல்கிறார்கள். அது போல் எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் செய்ய அனுமதி கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+