Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாஸ் ரூமிலேயே.. சிறுமி காலை சுற்றிக்கொண்ட "நாகராஜன்".. நீலநிறத்துக்கு மாறிய ஷகாலாவை ஞாபகம் இருக்கா

கிளாஸ் ரூமிலேயே விஷப்பாம்பு ஒன்று சிறுமியின் காலை சுற்றிக் கொண்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஸ்கூலுக்கு ஓடோடி வந்த 4ம் வகுப்பு மாணவியின் காலை, விஷப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டுவிட்டது..!

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மங்கரையை சேர்ந்தவர் சந்தோஷ்.. இவரது மகள் ஆஸ்ரயா... அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், லீவு முடிந்து நேற்று காலை, பள்ளிக்கு வந்தாள் ஆஸ்ரயா.. அப்போது மணி 9:30 இருக்கும்.

விஷப்பாம்பு

விஷப்பாம்பு

கிளாஸ்ரூமில் நுழைந்தவுடனேயே, அங்கு படுத்திருந்த பாம்பை தெரியாமல் மிதித்துவிட்டாள் சிறுமி.. அது ஒரு விஷப்பாம்பு.. காலால் மிதித்ததுமே, அந்த பாம்பு சிறுமியின் காலை மொத்தமாக சுற்றிக்கொண்டுவிட்டது.. இதனால், பயந்துபோய் கதறி துடித்தாள் சிறுமி.. காலை உதறினால், எங்கே பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்து அப்படியே சில நிமிஷங்கள் நின்றிருக்கிறாள்.. பிறகு, வேகமாக காலை உதறிவிட்டு ஓடினாள்.. அதற்குள் ஆஸ்ரயாவின் சத்தத்தை கேட்டு மற்ற கிளாஸ் ரூமில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த பாம்பை அடித்து கொன்றனர்.

 கிளாஸ் ரூம்

கிளாஸ் ரூம்

காலை அவ்வளவு நேரம் பாம்பு சுற்றியிருந்ததால், ஆஸ்ரயாவை பாம்பு கடித்திருக்கும் என்ற சந்தேகத்தில், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்... ஆனால், பாம்பு கடிக்கவில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்... இருந்தாலும், 24 மணி நேர கண்காணிப்பில் மாணவியை வைத்துள்ளனர்... அந்த பள்ளி வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறதாம்.. விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.. இதனால், சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு, பெற்றோர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

 ஷகாலா

ஷகாலா

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்துசென்றனர்... இந்த நேரத்தில் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.. இப்படித்தான் 3 வருடம் முன்பு இதே கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.. கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்த வக்கீஸ் அப்துல் அஜிஸ் என்பவரது 10 வயது மகள் ஷகாலா ஷெரின்.. வயநாடு அருகே ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

 கிளாஸ் ரூம்

கிளாஸ் ரூம்

சம்பவத்தன்று வழக்கம்போல் கிளாசில் உட்கார்ந்திருந்தாள் ஷகாலா.. அப்போது, மதியம் 3 மணி இருக்கும்.. கிளாஸ் ரூம் சுவற்றில் ஒரு ஓட்டை இருந்திருக்கிறது.. அந்த ஓட்டைக்குள் விளையாட்டாக தனது காலை விட்டாள் ஷாகாலா.. அப்போதே ஏதோ நறுக்கென கடிக்கவும், காலை உடனே வெளியே எடுத்துவிட்டாள். ஆனால் காலில் அந்த இடத்தில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.. இதை தன் வகுப்பு தோழிகளிடம் ஷகாலா காட்டவும், அதற்குள் டீச்சர் அங்கு வந்துவிட்டார்.

 ஷகாலா மரணம்

ஷகாலா மரணம்

ஷகாலாவின் காலில் பாம்பு போல கடித்ததற்கான அடையாளம் தெரிந்ததுமே, உடனே பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் ஷகாலா பரிதாபமாக இறந்துவிட்டாள்... அப்போது அவளது உடம்பு நீலகலரில் மாறியிருந்தது.. ஷகாலாவின் இந்த மரணம் கோழிக்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. அந்த பள்ளியிலும், புதர்கள் மண்டி கிடந்து பாம்புகள் நடமாடி இருந்த நிலையில், இன்று மீண்டும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது, கேரளாவை உலுக்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+