மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்
Recommended Video
நெல்லை: நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.
இதனையடுத்து நெல்லை மற்றும் குமரி மாவட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் தற்போது பெய்யும் மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. இதனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவி பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் இன்று குவிந்துள்ளனர், திற்பரப்பு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மழை காரணமாக தமிழக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications