"ஆபாச சைக்கோ".. நைட் நேரம், பாத்ரூம் ஜன்னலில்.. "மஞ்சள்" தேய்த்து குளிக்கும் பெண்களுக்கே குறி
ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த நெல்லை ராபின்சனிடம் விசாரணை நடக்கிறது
நெல்லை: வசதியானவர்கள் வசிக்கும் ஒரு காலனியில், இரவு நேரத்தில் சுற்றி சுற்றி வருவாராம் பால் ராபின்சன்.. யார் இவர்? இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பால் ராபின்சன்.. பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு காலனி உள்ளது.. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன..
பெரும்பாலும் அரசு ஊழியர்களும், மேல்தட்டு மக்களும், வயதானவர்களும் இந்த காலனியில் வசித்து வருகின்றனர்.. இந்த காலனிக்குள் அடிக்கடி புகுந்துவிடுவாராம் ராபின்சன்..
நெல்லை அருகே துணிகரம்.. பெட்ரோல் பங்க்கில்
டிரஸ் பெண்கள்
இரவு நேரமாகிவிட்டால், ஒவ்வொரு வீட்டின் சுவர் ஏறி குதித்து, அந்த வீட்டின் ஜன்னல் பக்கம் நின்று கொள்வாராம்.. பெண்கள் ரூமுக்குள் டிரஸ் மாற்ற வரும்போது, அவர்களை மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொள்வார்.. சம்பவத்தன்று இப்படித்தான் ஒரு வீட்டின் ஜன்னல் அருகே நின்று, பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்றபோது, கையும் களவுமாக சிக்கிவிட்டார்..
புதுமணப்பெண்
அதாவது, அவர் புதுமணப்பெண்.. அப்போதுதான் அங்கு குடிவந்துள்ளார்.. சம்பவத்தன்று அவர் மட்டும்தான் வீட்டில் இருந்துள்ளார்... இதை பகலிலேயே நோட்டமிட்டு வைத்து கொண்ட ராபின்சன், அந்த வீட்டில் எகிறி குதித்து பாத்ரூம் பக்கத்தில் உள்ள ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டார்.. செல்போன் கேமராவை ஆன் செய்து, அந்த ஜன்னல் வழியாக வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த பார்க்கில் வந்து உட்கார்ந்து கொண்டார்.. அது நைட் நேரம் என்பதால், கொஞ்ச நேரம் கழித்து, பாத்ரூம் லைட் அணைக்கப்பட்டுள்ளது..
பாத்ரூம் ஜன்னல்
உடனே அந்த பெண் குளித்து முடித்து போய்விட்டார் என்று நினைத்து, பாத்ரூம் ஜன்னல் பக்கம் சென்ற, செல்போனையும் எடுத்து கொண்டு வந்துள்ளர் ராபின்சன்... அப்போதுதான், அங்குள்ள சிலர் இதை கவனித்துவிட்டு, திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளனர்.. கடைசியில், அதே பார்க்கில், புதர் ஒன்றில் மறைந்து கொண்டிருந்த ராபின்சனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரும் ராபின்சனை பிடித்து விசாரித்து, அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர்..
ஆபாசம் - வீடியோ
அந்த செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. ராபின்சனுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை.. பகல் நேரத்தில், அன்றைய தினம் எந்த வீட்டுக்கு சென்று ஆபாச வீடியோ & போட்டோ எடுப்பது என்பதை பிளான் செய்து நோட்டமிட்டு கொள்வாராம்.. அன்றைய தினம் இருட்டு நேரத்தில் சுவர் ஏறி குதித்து, இப்படி அசிங்கமான வீடியோக்களை எடுத்து வந்திருக்கிறார்.. நீண்ட நாட்களாகவே இப்படி நடந்திருக்கிறது.. ஆனால் அந்த காலனியில் உள்ளவர்களுக்கு இது தெரியாமலேயே இருந்துள்ளது.
மஞ்சள் தேய்க்கும் பெண்கள்
ராபின்சனிடம் போலீசார் விசாரித்தபோது, பல திடுக் தகவல்களும் வெளியாகி உள்ளன.. பெரும்பாலும் பாத்ரூமில் பெண்கள் குளிக்கும் வீடியோவைதான் இவர் அதிகம் சேகரித்து வைத்திருக்கிறாராம்.. அதிலும் குடும்ப பெண்கள் குளிக்கும் வீடியோவை நிறைய வைத்துள்ளாராம்.. அதைவிட, மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்கள் என்றால், அந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்ப்பாராம் ராபின்சன்..
டீச்சர் மனைவி
இந்த ராபின்சன் நன்றாக படித்துள்ளார்.. சென்னையில் ஒரு ஐடி கம்பெனியிலும் பார்த்து வந்துள்ளார்... லாக்டவுன் வந்தபிறகுதான், சரியாக வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.. அந்த வேலையும் போய்விட்டது. இதைவிட இன்னொரு ஷாக் உள்ளது.. இவரது மனைவி ஒரு டீச்சராம்.. ஒரு குழந்தையும் இருக்கிறது.. ஆனால், ஏதோ விரக்தி காரணமாக, லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மனைவி வேலைக்கு போய்விட்டால் போதும், செல்போனை எடுத்துக் கொண்டு, பெருமாள்புரம் என்.எச்.காலனி பார்க்கிலேயே சுற்றி சுற்றி வருவாராம்..
லைட் சிக்னல்
அந்த பார்க்கில் வாக்கிங் செல்லும் பெண்களின் பின்னாடியே போவதும் வருவதுமாக இருந்திருக்கிறார்.. அந்த காலனி பெண்களின் பாத்ரூம் ஜன்னல்களிலும் செல்போன் கேமராவை வைத்து, வீடியோ எடுப்பார்.. ஆனால், எல்லா வீடியோக்களும் இரவு நேரத்தில்தான் எடுப்பாராம்.. பாத்ரூம் லைட், எரிவதும், அணைப்பதும் தான் இவருக்கு பெரிய சிக்னலாக இருந்துள்ளது.. அநேகமாக இவர் ஒரு சைக்கோவாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது என்றாலும் தொடர் விசாரணை ராபின்சனிடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!