ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது? வாக்குவாதம் முற்றி மின் வாரிய ஊழியரின் மண்டை உடைப்பு!
திருவள்ளூர்: மின்வெட்டு காரணமாக மின் வாரிய ஊழியருடன் நடந்த வாக்குவாதம் முற்றி அவரது மண்டை உடைக்கப்பட்ட நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் நடைபெற்றுள்ளது.
சமீப நாட்களாக தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மின் வெட்டு பிரச்சனையால், பொதுமக்களுக்கும், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்றிரவு கூட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தங்கள் ஏற்றி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மின்சாரம் முக்கியம்
மனித வாழ்வோடு இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மின்சாரம் திகழ்கிறது. இதனால் தான் இன்று அரை மணி நேர மின் தடையை கூட மக்களின் மனம் ஏற்க மறுக்கிறது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் நேற்று அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இதனால் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணவாளநகரில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என வினவியுள்ளது.

பதில் இல்லை
இதற்கு அங்கு பணியில் இருந்த அதிகாரி முறையான பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் அங்கிருந்த மின் வாரிய ஊழியர் குப்பன் என்பவர், ஏற்கனவே கரண்ட் இல்லை என்கிற ஆத்திரத்தில் இருந்தவர்களை மேலும் சூடாக்கும் வகையில் சில வார்த்தைகளை உதிர்த்ததாக கூறப்படுகிறது.

மண்டை உடைந்தது
இதனால் கோபமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்களை கொண்ட கும்பல் மின் வாரிய அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் ஏட்டிக்கு போட்டியாக பேசிய மின் வாரிய ஊழியர் குப்பனின் தலையையும் பதம் பார்த்திருக்கிறது. மண்டை உடைபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மின் வாரிய ஊழியர் குப்பன், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை போலீஸ் தேடி வருகிறது.

அசம்பாவித நிகழ்வு
இதனிடையே அரசு அலுவலகங்களுக்கு விளக்கம் கேட்டு வரும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசு அதிகாரிகளுக்கு இருக்கிறது. நீயென்ன கேட்பது நானென்ன சொல்வது என்கிற நிலையில் இருந்தால் இது போன்ற அசம்பாவித நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

குமரி மாவட்டம்
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் தடை குறித்து விளக்கம் கேட்க மின் வாரிய உதவி செயற்பொறியாளரிடம் பொதுமக்களில் ஒருவர் தொடர்பு கொண்ட போது, அவர் அமைச்சரை கேளுங்க என சிறிதும் பொறுப்பில்லாமல் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications