கணவனை தூக்கில் தொங்கவிட்ட "ஒத்த ரோசா.." விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்
காயத்ரி பணியாற்றிய மருத்துவமனையில் அவரது முன்னாள் காதலனும் பணியாற்றியுள்ளார்.
திருவள்ளூர்: முன்னாள் காதலனை மீண்டும் கரம்பிடிக்க கணவனை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ்(29). இவர் மண்ணூர்பேட்டையில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் தேடி வந்துள்ளனர். இவரது உறவினர் பெண்ணான காயத்ரி என்பவர் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.
காயத்ரியின் பெற்றோரும் வரன் தேடிய நிலையில் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்துள்ள நிலையில், காயத்ரி வேலை செய்த மருத்துவமனையில் அவரது முன்னாள் காதலர் சீனிவாசன் பணிக்கு சேர்ந்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் இவர்களிடையே நட்பு மலர்ந்திருக்கிறது. இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து காதலாக பரிணமித்திருக்கிறது.

காதல்
தனது மனைவி அடிக்கடி யாருடனோ நீண்ட நேரம் போன் பேசுவதை பார்த்து சந்தேகமடைந்த கணவர் யுவராஜ் இது குறித்து காயத்ரியிடம் விசாரித்துள்ளார். ஆனால் காயத்ரி எதையும் வெளிப்படையாக கூறவில்லை. எனவே யுவராஜுக்கு சந்தேகம் தீவிரமடைந்துள்ளது. மனைவி காயத்ரிக்கு தெரியாமல் அவருடைய செல்போனை எடுத்து சோதித்து பார்த்ததில் காயத்ரி, சீனிவாசன் எனும் நபருடன் நீண்ட நேரம் பேசியிருப்பது கண்டுபிடித்துள்ளார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் காயத்ரியின் முன்னாள் காதலன்தான் சீனிவாசன் என்பது தெரியவந்தது.

நண்பர்கள்
இது தொடர்பாக காயத்ரியிடம் சண்டை போட்ட யுவராஜ், வேலைக்கு போக விடாமல் வீட்டிலேயே குழந்தையை பராமரித்துக் கொண்டு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். காயத்ரி வேலைக்கு போகாததால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை பெரிதாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காயத்ரி, தனது கணவன் யுவராஜை பழி தீர்க்க முடிவெடுத்துள்ளார். எனவே தனது காதலன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேரையும் 21ம் தேதி நள்ளிரவு இரவு வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அப்போது யுவராஜ் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கொலை நிகழ்ந்துள்ளது.

கொலை
சீனிவாசனின் நண்பர்கள் யுவராஜின் காலை பிடித்துக் கொள்ள சீனிவாசனும் காயத்ரியும் சேர்ந்து யுவராஜனின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் யுவராஜை தூக்கில் தொங்கவிட்டு யாருக்கும் தெரியாமல் சீனிவாசனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். 22ம் தேதி காலையில் காயத்ரி தனது கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டு அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை
பரிசோதனை முடிவில் யுவராஜ் தூக்கிட்டு இறக்கவில்லையென்றும், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காயத்ரியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். காயத்ரி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது காதலன் சீனிவாசன், அவருடைய நண்பர்கள் மணிகண்டன் மற்றும் ஹேமநாத் என்கிற ஜில்லு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். முன்னாள் காதலனுடன் மீண்டும் சேர கணவரை நர்ஸ் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications