திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு போறீங்களா.. இனி இலவச தரிசனம்தான்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்றது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இங்கு மாதந்தோறும் பவுர்மணி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவர். அது போல் இங்கு மகா சிவராத்திரி, கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.

இந்த தலம் பஞ்ச பூதங்களில் ஒன்று. சிவன் இங்கு நெருப்பு வடிவில் காட்சி தருகிறார். இங்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இங்கு ஏற்றியவுடன்தான் வீடுகளில் ஏற்றுவர். இந்த கோயிலில் மலை மீது டன் கணக்கில் நெய், திரிக்காக நிறைய வேஷ்டிகள், தீபம் ஏற்ற கொப்பரை ஆகியவை கொண்டு செல்லப்படும்.
மாலை 6 மணியானதும் கோயிலில் ஒரு தீபம் ஏற்றுவர். அதை அப்படியே மலை இருக்கும் பகுதி நோக்கி காட்டுவர். உடனே மலை மீது உள்ள சிவாச்சாரியார்கள் அந்த விளக்கு எரிவதை பார்த்துவிட்டு மலை மீதும் தீபம் ஏற்றுவர். இந்த தீபம் மழை, காற்று, என எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் அணையாமல் 10 நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செயல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டத்தை முழு நேரமாக செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

2023-2024 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பின் படி அண்ணாமலையார் கோயிலில் உள்ள கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் பிரசாச கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 50 மூலம் ஆண்டுக்கு ரூ 1.23 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனம் மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேகர் பாபு தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications