பூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்!
பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பால் காவலர் உயிரிழந்தார்
Recommended Video
திருவண்ணாமலை: பூத்துக்குள் மும்முரமாக தேர்தல் வேலையை பார்த்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்து விட்டார்!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.. 2 கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த தேர்தலின்போது பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. மொத்தம் 315 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதனுடைய பாதுகாப்பு பணிக்காக 35 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதலே இந்த பாதுகாப்பு தீவிரம் நடந்து வந்தது. அதில் ஒருவர்தான் சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ்.. திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர்.. 58 வயதாகிறது.. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூமில் வேலை பார்த்து வந்தவர்.
துரிஞ்சாபுரம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு பள்ளியில் நடந்து வருகிறது. இந்த மையத்தில்தான் நேற்றிரவு முருகதாஸ் பாதுகாப்பு பணிக்கு போனார்.. பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.. அதனால் நெஞ்சை பிடித்தபடியே மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்து பதறிய சக போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகதாஸ் இறந்துவிட்டார்.. அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும், பாதுகாப்புக்கு போன சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை திருவண்ணாமலையில் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications