ஞாபகம் இருக்கா.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்.. அவர் இப்போ ஜெயிலில்.. அதிரடி கைது

சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: '35 வயது அங்கன்வாடி பெண் ஊழியர் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவனுடன் தலைமறைவாகி இருந்த பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை..'

Recommended Video

    15 வயது சிறுவனுடன் ஓடிய 35 வயது பெண்... போக்சோவில் கைது.. நடந்தது என்ன?

    கடந்த வாரம் ஒரு அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நடந்தது.. எரவாஞ்சேரி அருகே வசித்து வந்த தம்பதி பாலகுரு - ராசாத்தி.. இவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அதே தெருவில் வசித்து வரும் தம்பதி பாலகிருஷ்ணன்-லலிதா.. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகிறார்கள்.. 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். லலிதாவுக்கு 35 வயதாகிறது..

    லலிதா

    லலிதா

    தேதியூரில் உள்ள அங்கன்வாடியில் சமையல் ஊழியராகவும் லலிதா வேலை பார்த்து வருகிறார்.. பாலகுருவின் 15 வயது மகன் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இந்நிலையில்தான், 35 வயதுடைய லலிதாவுக்கு 15 வயதே சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. சில மாதங்களாகத்தான் சிறுவனை, லலிதாவுக்கு தெரியும்.. ஆனால், அதற்குள் நெருங்கி பழகிவிட்டார்.. இந்த விஷயம், சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.. மகனை கண்டித்துள்ளனர்..

     சித்தி வீடு

    சித்தி வீடு

    இங்கே இருந்தால் சரிவராது என்று நினைத்து, மகனை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்க வைத்தனர்.. அதனால் சித்திவீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்திருக்கிறான் சிறுவன். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி, வழக்கம்போல் ஸ்கூலுக்கு சென்ற சிறுவனை காணவில்லை.. வீட்டுக்கும் வரவில்லை.. அதனால் குடும்பத்தினர் பதறி போய் எல்லா இடங்களிலும் தேடினர்.. ஆனால் கிடைக்கவில்லை..

     விசாரணை

    விசாரணை

    எனவே, இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் அதன்பேரில் விசாரணை நடத்தி வந்தனர்.. அப்போதுதான், லலிதா, அந்த சிறுவனுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, லலிதாவின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து அவரை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு, லலிதாவை கண்டுபிடித்துவிட்டனர்..

    போக்சோ

    போக்சோ


    ஏரவாஞ்சேரி போலீசார் வேளாங்கண்ணி சென்று, அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.. 35 வயதுடைய லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. தற்போது அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அவருடன் இருந்த 15 வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடமும் ஒப்படைத்தனர்... கடந்த ஒரு வாரமாகவே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+