'அறைஞ்சிடுவேன் வெளியே போ'.. திருவாரூர் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஆவேசம்.. வீடியோ
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர்களை பார்த்து அந்த பெண் அதிகாரி அறைஞ்சிடுவேன் வெளியே போ என்று பேசுவது போல் வீடியோ உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மகளிர் சுய உதவி குழுவினர் சிலர் கடன் வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வங்கிக் கிளையில் பணியில் இருந்த பெண் அதிகாரி, பொதுமக்களை எழுந்து வெளியே போகச் சொல்லி தரக்குறைவாக பேசினாராம்.

அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அந்த பெண் அதிகாரி, அங்கிருந்தவர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் மிருகங்களா.. எதுக்கு சிரிக்குற.. அறைஞ்சுடுவேன்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. எழுந்திருச்சு எல்லாரும் வெளியே போ.. எல்லாரும் வெளியே போனால் தான் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடையாது.. வெளியே போங்க எல்லாரும்.. இங்கு கத்திக்கொண்டிருப்பர்கள் எல்லாரும் பைத்தியமா " என்று கேட்பதாக வீடியோ உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ #iob #bank #Thiruvarur pic.twitter.com/kte9urW2DO
— velmurugan (@velmurugantheni) November 20, 2024
பொதுவாக சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்த சேவைக்காக சென்றாலும், அங்கு வாடிக்கையாளர்களிடம் ஒரு சில ஊழியர்கள் சரியான மரியாதை கொடுப்பது இல்லை என்றும், அலைகழிக்க வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். நகைக்கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் என பல்வேறு சேவைகளின் போதும் முறையான தகவல்கள் கிடைக்காமல் தவிப்பதாக பலரும் ஆதங்கங்களை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications