அரிசியில் புழுக்கள்.. பழைய பிரெட்.. கிழிந்த துணிகள்.. அரசு இதுக்கு நிவாரணம் கொடுக்காமலே இருக்கலாம்!
கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
Recommended Video

மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கிழிந்த துணிகள்
இந்த நிலையில் அரசு ஏற்பாடு செய்திருக்கும் பல கஜா புயல் நிவாரண முகாம்களில் மிக மோசமான நிலையிலேயே துணிகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட போர்வைகள் கிழிந்து, பூஞ்சைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கஜா புயல் பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோசமான உணவுகள்
அதேபோல் இந்த முகாம்களில் உணவுகள் எங்கும் நல்ல நிலையில் இல்லை. புழுக்கள் நிறைந்த அரிசிகளில் உணவு சமைத்து கொடுத்து இருக்கிறார்கள். மிகவும் பழைய பிரெட்டை நிவாரணமாக வழங்கி இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

எங்கு இப்படி
டெல்டா மாவட்டங்களில்தான் இந்த அவல நிலை அரங்கேறி உள்ளது. முக்கியமாக அரசு, மன்னார்குடி, திருவாருர், ஒரத்தநாடு, பாலையூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் அமைத்து இருக்கும் முகாம்களில்தான் இந்த அவலநிலை இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் இன்னும் புயல் பாதிப்பில் இருந்தே வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்
இந்த புயல் காரணமாக ஏற்கனவே காய்ச்சல்கள் பரவி வருகிறது. கொசுக்கள் இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இத்தனைக்கும் மத்தியில் முகாம்களில் சுகாதரமற்ற உணவுகள் கொடுப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications