Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதல்.. சுற்றிலும் அத்தனை பேர்.."அசிங்கமாக" சிக்கிய திருவாரூர் விஏஓ சுதா.. இதெல்லாம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும்கூட, சில அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டு விடுவார்கள்.ஒரு நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆள்மாறாட்டம்: அந்தவகையில், ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் மோசடி பேர்வழிகள் பலரும் சிக்கி வருகிறார்கள்.

Patta Change and why did Thiruvarur police arrest Village Administration Officer Sudha

அதேபோல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும்கூட, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் உலா வருகின்றன... சில நாட்களுக்கு முன்புகூட, பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் கேட்டிருக்கிறார் குடியாத்தம் அக்ரஹாரம் விஏஓ.

தேன்மொழி: அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ஜெயமுருகன் (38), கிராம நிர்வாக உதவியாளராக இருப்பவர் தேன்மொழி.. இவர்கள் 2 பேரும், விவசாயி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.

தான் ஒரு விவசாயி, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கதறியும், லஞ்சம் கொடுத்தால்தான், வேலை நடக்கும் என்று விஏஓ கறாரா சொன்னாராம். கடைசியில், விஏஓ ஜெயமுருகன், தேன்மொழி இருவருமே கைதானார்கள். இதோ இப்போதும் ஒரு அதிகாரி கைதாகியிருக்கிறார்.

பெயர் மாற்றம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வசிப்பவர் சுதா.. 42 வயதாகிறது.. இவர், கொரடாச்சேரி பெருமாள் அகரம் கிராம நிர்வாக அலுவலராக வேலைபார்த்து வருகிறார்.. இந்நிலையில், கிருஷ்ணகோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மதியழகன் என்பவர், தன்னுடைய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், இந்த பட்டாவை மாற்றவேண்டுமானால், அதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரும்படி விஏஓ சுதா கேட்டுள்ளார்.. இந்த லஞ்சப்பணத்தை தருவதற்கு மதியழகன் ஒப்புக்கொள்ளவில்லை..

அதிரடி கைது: அதனால், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.. போலீசாரின் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரத்துடன், விஏஓ ஆபீசுக்குள் நுழைந்தார் மதியழகன். அங்கிருந்த விஏஓ சுதாவிடம் சென்று, லஞ்சப்பணத்தை மதியழகன் தந்ததுமே, மறைந்திருந்த போலீசார், விஏஓ சுதாவை பிடித்து கைது செய்தனர். ஒரு அதிகாரியே, அதுவும் பெண் அதிகாரியே லஞ்சம் வாங்கி சிக்கியிருப்பது, அதிர்ச்சியை தந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+