Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருளில் மூழ்கிய திருவாரூர்.. மாவட்டம் முழுக்க மின் விநியோகம் பாதிப்பு எனத் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: இப்போது மாநிலத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இரவிலும் பல இடங்களில் புழக்கமான நிலையே இருக்கிறது. இதற்கிடையே திருவாரூர் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை சீசன் நின்றது முதலே வெப்பம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மே மாதம் தான் வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இப்போது மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. தமிழ்நாட்டிலும் கூட இதே நிலை தான்.

Power outage in entire Tiruvarur district people are affecting the most

வெப்பம்

கடந்த சில வாரங்களாகவே மாநிலம் முழுக்க வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இடையில் சில நாட்கள் மழை பெய்தாலும் கூட வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இன்று கூட சென்னை உட்பட மாநிலத்தில் மொத்தம் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது.

மின்தடை

அதீத வெப்பம் காரணமாகக் காலை மட்டுமின்றி இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவு மின்விசிறி அல்லது ஏசி இல்லை என்றால் வீட்டிலேயே இருக்க முடியாது என்ற சூழலே இருந்து வருகிறது. இதற்கிடையே இப்போது திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்

திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் மின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

எப்போது சீராகும்

மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறிந்து அதைச் சரி செய்யும் பணிகளில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் மின் வினியோகம் சீராகும் என தெரிகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மற்ற பகுதிகளில் மின் வினியோகத்தைச் சீராக்கத் தேவையான நடவடிக்கைகளை மின்வாரிய ஊழியர்கள் எடுத்து வருகிறார்கள்.

அதேநேரம் இதுபோல மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திடீரென இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+