மூதாதையர் வீட்டில் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சராக முதல் விசிட்! வருகை பதிவேட்டில் எழுதியது என்ன?

திருக்குவளையில் உள்ள மூதாதையர் வீட்டிற்கு விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதுமட்டுமல்ல கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருக்குவளையில் இருந்து, தாம் பிரச்சாரத்தை தொடங்கியதை செண்டிமெண்டாக அவர் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருவாரூர் வீதிகளில் செல்லும் போது நினைவெல்லாம் தனது தாத்தாவின் சிந்தனை தான் வந்தது எனக் கூறியுள்ளார்.

திருவாரூர் சுற்றுப்பயணம்

திருவாரூர் சுற்றுப்பயணம்

அமைச்சராகிய பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அங்கு அவருக்கு உற்சாக மிகு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கும் சென்றார் உதயநிதி. அங்கு அஞ்சகம் அம்மையார், கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது பற்றி செண்டிமெண்டாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வருகைப் பதிவேடு

வருகைப் பதிவேடு

''2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20 ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராசி முதல் முறையாக மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம்.'' என்று வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

திருவாரூர் வீதிகள்

திருவாரூர் வீதிகள்

முன்னதாக அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் வீதிகளில் செல்லும் போது நினைவெல்லாம் தனது தாத்தாவின் சிந்தனை தான் வந்தது எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல மக்கள் கடலாய் திரண்டு வந்து தன்னை வரவேற்க வந்தது நெகிழ வைத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பரிசளிப்பு

பரிசளிப்பு

இதனிடையே ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட வில் வித்தை, நீச்சல், யோகா, உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவாரூரில் வைத்து இன்று பரிசுகள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+