திருப்பதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து! தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!
அமராவதி: திருப்பதி ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
திருப்பதி ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹிசார் எக்ஸ்பிரஸ் மற்றும் ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இரு ரயில்களின் தலா இரண்டு பெட்டிகளில் தீ பரவியுள்ளது.

ஆனால் தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகே கச்சா எண்ணெய் ஏற்றி சென்றன சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டது. 23 டேங்கர்களில் தீ பரவிய நிலையில், 8 டேங்கர்கள் தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. விபத்து ஏற்பட்ட இடத்தில் 200 மீ தொலைவுக்கு தண்டவாளம் மற்றும் ரயில் மின்சார கேபிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications