மக்களுக்கு பாதுகாப்பு 'இல்லாத' இடத்தில் 'சின்னத்தம்பி' விடப்படும்.. அமைச்சர் என்ன சொல்றார் புரியுதா?
Recommended Video

கோவை: ஊருக்குள் உலா வரும் சின்னதம்பி யானையை விரைவில் பிடித்து, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் விடப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

காட்டுயானை சின்னதம்பி
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடாகம் பகுதியில் பிடிக்கபட்ட சின்னதம்பி காட்டுயானை டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது. ஆனால், யானை தற்போது பல கிலோமீட்டர் தூரம் கடந்து பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில் வலம் வருகிறது.

கும்கியாக மாற்றப்படும்
இந்த யானையை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இந்த யானையைக் பிடிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மீண்டும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வழிகள் ஆய்வு
பின்னர், நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பி யானையைக் பிடிக்கும் வழிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், யானையை மீண்டும் பிடிக்கும் பணி விரைவில் துவங்கும் என்றும் கூறினார்.

பாதுகாப்பு இல்லாத இடம்
சின்னதம்பி யானை விரைவில் பிடிக்கப்படும், வேலி போட்டு அடைத்து, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் விடப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications