Exclusive: ஆஸ்திரேலியாவிலிருந்து நித்யானந்தா பாணியில் விளக்க வீடியோ அனுப்புகிறாராம் மகாவிஷ்ணு!
திருப்பூர்: சென்னையில் அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகாவிஷ்ணு விரைவில் விளக்க வீடியோவை அனுப்புவார் என அவரது அறக்கட்டளை பெண் நிர்வாகி ஒருவர் ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் மகாவிஷ்ணு பேசியது தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதாவது போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் பகுத்தறிவே இல்லாமல் ஒரு விஷயத்தை மகாவிஷ்ணு பேசியதாக வீடியோ வைரலாகியுள்ளது.

பார்வையற்ற ஆசிரியர் ஒருவரை வைத்துக் கொண்டே மகாவிஷ்ணு இவ்வாறு பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த ஆசிரியர் எதிர்த்த போது கூட அவரை அறிவற்றவர் என மகாவிஷ்ணு விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மகாவிஷ்ணுவை விடமாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
மேலும் மகாவிஷ்ணுவை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். மகாவிஷ்ணுவின் பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து திருப்பூர் குத்தம்பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையின் தொலைபேசி எண்ணுக்கு ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் தொடர்பு கொண்டோம். அப்போது எதிர்முனையில் பெண் சிஷ்யை ஒருவர் பேசினார்.
அவரிடம் மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என நாம் கேட்ட போது , "அவர் வெளிநாட்டில் இருக்கிறார்" என்றார். அவரை எப்படி தொடர்பு கொள்வது என கேட்ட போது, "அவருடைய எண் எனக்கு தெரியாது, மூத்த நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.
சென்னை அரசு பள்ளியில் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் மகாவிஷ்ணு பேசியுள்ளார். ஆனால் அது குறித்து அவர் தரப்பில் யாருமே விளக்கமளிக்கவில்லையே என கேட்டோம். அதற்கு அவர் முதலில் எந்த விஷயம் என புரியாத படியே கேட்டார். பிறகு நாம் விளக்கியதை அடுத்து இதுகுறித்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து விளக்கம் கொடுப்பார் என அந்த பெண் சிஷ்யை தெரிவித்துள்ளார்.
அதாவது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள மகாவிஷ்ணு, இந்த சர்ச்சை ஏற்படும் என்பதற்காக முன் கூட்டியே சென்றுவிட்டாரா இல்லை ஏதாவது நிகழ்வுக்காக சென்றாரா என தெரியவில்லை. எனினும் அவர் விரைவில் நித்யானந்தா பாணியில் வீடியோவில் விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications