Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடுமலைப்பேட்டையில் தனியார் பாரில் பொதுமக்கள் நடத்திய தரமான சம்பவம்.. கையோடு செய்ததுதான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போதை ஆசாமிகளால் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தனியார் மதுபான விற்பனைக்கூடத்தை அடித்து நொறுக்கினார்கள்.. மேலும் டாஸ்மாக் மற்றும் 2 மதுபானக்கூடங்களை அகற்ற வேண்டும் என்று மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதியில் உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் இருக்கிறது. இந்த சாலைகளில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.

Public vandalized a private bar in Udumalaipet Tirupur district What happened


இந்த மூன்று மதுக்கடைகளுக்கும் வரும் குடிமகன்கள், அடிக்கடி மதுபோதையில் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள்..

இந்த நிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசிங்கமான செயல்களை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறினாராம்.. அப்போது தனியார் மதுபானக்கூடத்தைச் சேர்ந்தவருக்கும், அந்த வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் சிலர் அவரை சரமாரியாக தாக்கினார்களாம் இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஆத்திரத்துடன் தனியார் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தின் போது தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி உள்ளார்கள்.

அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தனியார் மதுபானக்கூடத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் உடுமலைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+