வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்னு சொன்னாரே?.. ஆனால் இப்ப என்னாச்சு.. டிடிவி தினகரன்
திருப்பூர்: என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார். ஆனால் தற்போது சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதம் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒரு பிரிவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு பிரிவாகவும் இருக்கிறார்கள். அதிமுக என்பது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடும் கட்சியாக இருந்தது.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் இன்று அதை எடப்பாடி பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வட்டார கட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடல் போன்ற அதிமுக இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வருங்காலத்தில் வெறும் 4 பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதுதான் அவர்களுடைய விருப்பமாக இருக்கிறது.

வட்டார கட்சி
வட்டார கட்சியாக உள்ள அதிமுக, இனி சமுதாய கட்சியாகவும் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போது அவசரதியில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை.

வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்
அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அமைச்சராக இருந்தனர். ஸ்டாலினை அமைச்சராக்குவதற்கு கருணாநிதி பொறுமை காத்தார். ஆனால் ஸ்டாலினோ அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக அறிவித்தது ஏன் என தெரியவில்லை. என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலின் முன்பு தெரிவித்தார். தற்போது சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வருங்காலத்தில் ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதல்வர்கள் கூட அறிவிப்புகளை வெளியிடலாம் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

டிடிவி தினகரன்
இன்னொரு பேட்டியில் டிடிவி தினகரன் கூறுகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தால் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசாங்கமே நல்ல தரமான உணவு குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்தில் அம்மா உணவகங்கள் மூலம் கொடுத்ததை பல பொருளாதார அறிஞர்களே பாராட்டினார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை மூடு விழா நடத்த வேண்டும் அல்லது அவர்களின் தலைவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆதரவற்றோர்களுக்கு அட்சய பாத்திரமாக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை முடக்கினால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். திராவிட மாடல் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதல்வர் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறையை சுயமாக இயங்கவிட வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் தலைவிரித்தாடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். அமமுக சுயமாக சிந்தித்து செயல்படும் இயக்கம். இபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்து விட்டார் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
-
தர்மபுரி முதல் பெரம்பூர் வரை! பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
2021 vs 2026.. திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, விசிக காங்கிரஸ்.. யாருக்கு லாபம்.. ஏமாந்தது யார்? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு











Click it and Unblock the Notifications