பல ஆண்களுடன் உறவு.. "குழந்தைக்கு அப்பா யாரு".. திருதிருவென விழித்த பெண்.. கோர்ட்டில் பரபர தீர்ப்பு
திருச்சி மாவட்டத்தில் நடந்த குழந்தை கடத்தலில் 4 பேர் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்
திருச்சி: கடந்த 3 நாட்களாகவே, குழந்தை கடத்தல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக தற்போதைக்கு 4 பேர் கைதாகி இருந்தாலும், மிகப்பெரிய நெட்வொர்க் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால் பரபரப்பு கூடி வருகிறது.
லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு.. 42 வயதாகிறது.. இவரது மனைவி மெர்சி.. இவர்கள் 2 பேருமே வழக்கறிஞர்கள்.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2 பேருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சண்முகவள்ளி என்பவர் பிரபுவை வழக்கு ஒன்றிற்காக சந்திக்க வந்துள்ளார்.. அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக உறவு மாறியது.

கர்ப்பிணி
பிரபுவின் அலுவலகத்தில், ஜானகி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் லால்குடி அடுத்த அன்பில் மங்கமாள்புரம் பகுதியை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது.. ஆனால், ஜானகிக்கு பல ஆண்களிடம் உறவு இருந்து வந்துள்ளது.. பிறகு திடீரென கர்ப்பம் தரித்துவிட்டார்.. ஆனால், பலருடன் உறவில் இருந்ததால், யாருக்கு அந்த குழந்தை பிறந்தது என்பது அவருக்கே தெரியவில்லை.. கடந்த ஜூலை மாதம் ஜானகி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து, பிரபுவிடம் ஐடியா கேட்டுள்ளார். இதற்கு பிரபு, குழந்தை பிறக்கட்டும், அப்பறம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி உள்ளார்.

திருதிரு
ஆனால் பிரபுவும், சண்முகவள்ளியும் சேர்ந்து ஜானகிக்கு தெரியாமல் ஒரு திட்டம் தீட்டி உள்ளனர்.. ஜானகிக்கு ஆண் குழந்தை பிறந்தால் 5 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை பிறந்தால் 3.5 லட்சம் ரூபாய்க்கும் விற்றுவிடுவதாக முடிவு செய்துள்ளனர். நிறைமாதம் வந்தது.. ஜானகியும் செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால் அப்போது, கணவர் யார் என்று கேட்டார்கள்.. ஜானகி திருதிருவென விழித்துள்ளார்.. இதனால் அவருக்கு பிரசவம் பார்க்காமல், அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள்..

சைல்ட்லைன்
அங்கு ஜானகிக்கு செப்டம்பர் 17ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைக்கு அப்பா யார் என்று, அங்கும் டாடக்டர்கள் கேட்டுள்ளனர்.. அப்போதும் ஜானகி விழித்துள்ளார்.. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சைல்ட் லைனுக்கு தொடர்பு கொண்டு, ஜானகி குழந்தை பிறந்தது குறித்து தகவல் தெரிவித்துவிட்டனர்.. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரபுவும், சண்முகவள்ளியும், ஜானகியை அழைத்து கொண்டு, அந்த குழந்தையையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினார்.

பச்சிளம் குழந்தை
பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தையை கடந்த 23ம் தேதி விற்று விடலாம் என்று ஜானகிடம் சொல்லி, குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டனர்.. அதில், 80 ஆயிரம் ரூபாய் ஜானகிக்கு தந்துவிட்டு, 20 ஆயிரம் ரூபாயை பிரபு ஜோடி எடுத்துக் கொண்டது. ஆனால், தன் குழந்தையை, பல லட்சம் ரூபாய்க்கு பிரபு விற்பனை செய்துள்ளது, அதற்கு பிறகுதான் ஜானகிக்கு தெரியவந்தது.. இதனால் ஆத்திரமடைந்துள்ளார் ஜானகி, லால்குடி மகளிர் போலீசில் புகார் தந்தார்.. தன்னுடைய குழந்தையை கடத்தி சென்று விட்டதாகவும் கண்டுபிடித்து தரும்புடியும் புகார் தந்தார்..

ஜானகி கேஸ்
ஆனால், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.. இதனால் நொந்துபோன ஜானகி, கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி மீது புகார் தந்தார்.. அத்துடன் நில்லாமல், மதுரை ஹைகோர்ட்டிலும் ஜானகி கேஸ் போட்டார்.. இதையடுத்து, கோர்ட் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.. பின்னர், 3 ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீசாரை கொண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்..

அப்பா யார்
இறுதியில், கடந்த 4ம் தேதி ஜானகி மதுரை ஹைகோர்ட்டில், பிரபுவுக்கும் சண்முகவள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை, குழந்தை என்னிடம் தான் உள்ளது என்று நீதிபதியிடம் ஜானகி தெரிவித்துள்ளார்.. இதைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனார்.. ஜானகியின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை அறிந்து, "குழந்தையை காட்டுங்கள்" என்று ஜானகியிடம் சொன்னார்.. ஆனால் ஜானகி குழந்தையை காட்டவேயில்லை.. பின்னர், உரிய விசாரணை நடத்தி குழந்தையை கண்டுபிடிங்கள் என்று திருச்சி மாவட்ட எஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டார்...

4 பேர் கைது
இந்த விஷயத்தில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் மொத்த உண்மையும் வெளியே வந்தது. ஜானகிக்கு பிறந்த குழந்தையை பிரபுவும், சண்முகவள்ளியும் கவிதா என்பவருக்கு விற்றுள்ளதும் உறுதியானது.. இதையடுத்து, பிரபு, சண்முகவள்ளி கார் டிரைவர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். ஜானகி மீதும் 8 பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி ஜெயிலில் அடைத்தனர்...

கைமாறிடுச்சே
ஆக மொத்தம், அந்த பச்சிளம் குழந்தை, மூன்று கை மாறி விற்பனை ஆகி உள்ளது.. இப்போது குழந்தை எங்கே தெரியவில்லை.. குழந்தைக்கு அப்பா யார் என்றும் கடைசி வரை தெரியவில்லை.. இவர்கள் இந்த குழந்தையை போலவே, எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்கள் என்றும் தெரியவில்லை.. சென்னை, நாமக்கல், திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் செல்போன் சிக்னல் காட்டி வருவதால், குழந்தை கடத்தல் கும்பல் குறித்து இன்னும் முழு தகவலும் கிடைக்கவில்லை.. போலீசாரும் தீவிரமாக நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.. 3 நாட்களாகவே, இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications