டெல்லி போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்போம்.. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் தீர்மானம்!
திருச்சி : நவம்பர் 29, 30-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் 5 ஆயிரம் தமிழக விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் இருந்து 30 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் டெல்லி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பது என தீர்மானம் போடப்பட்டுள்ளது.

நதிகளை தேசியமயமாக்கி அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள், பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், காவிரியில் கர்நாடக வெள்ள நீரை ஒரு மாதத்தில் திறந்து விட்டு விட்டு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியவாறு மாதா மாதம் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, மழையும் இல்லை. இந்த நிலையில் விவசாயிகளின் நகை, டிராக்டர் ஆகியவற்றை வங்கிகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், கொள்ளிடம் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், காவிரி, கொள்ளிடத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது எனவும் செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications