டெல்லி போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்போம்.. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் தீர்மானம்!
திருச்சி : நவம்பர் 29, 30-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் 5 ஆயிரம் தமிழக விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் இருந்து 30 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் டெல்லி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பது என தீர்மானம் போடப்பட்டுள்ளது.

நதிகளை தேசியமயமாக்கி அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள், பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், காவிரியில் கர்நாடக வெள்ள நீரை ஒரு மாதத்தில் திறந்து விட்டு விட்டு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியவாறு மாதா மாதம் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, மழையும் இல்லை. இந்த நிலையில் விவசாயிகளின் நகை, டிராக்டர் ஆகியவற்றை வங்கிகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், கொள்ளிடம் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், காவிரி, கொள்ளிடத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது எனவும் செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications