திருச்சி அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத சிசு.. பரபரப்பு!!
திருச்சி அருகே 7 மாத பெண் குழந்தையின் உடல் கேட்பாரற்று வீசப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் நடந்துள்ள சில குற்றச்செயல்கள்- வீடியோ
திருச்சி: மணப்பாறை அருகே 7 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல இடங்களில் சிசுக்கள் கேட்பாரற்று வீசப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரதியார் நகரில் குடியிருப்பு பகுதியில் 7 மாத பெண் சிசு உயிரற்ற நிலையில் கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசுவை போட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications