திருச்சியில் 332 தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா அரிசி, காய்கறிகள்
திருச்சி: திருச்சி மாநகர் அதிமுக மாவட்ட கழக சார்பில் 14 வது நாளாக இன்று மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 332 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் விலையில்லா அரிசி, காய்கறிகளை மாநகர மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்மலை கோட்ட அலுவலகத்தில் தொடர்ந்து 14-வது நாளாக இன்று விலையில்லா அரிசி பைகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் திருச்சி மாவட்ட மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொருட்களை வழங்கினார்கள்.
மீதமுள்ள ஶ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்று மாநகர மாவட்ட செயலாளர் ப. குமார் தெரிவித்தார்.
அதேபோல் நேற்று திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட பிலோமீனாள் புரம், அண்ணா நகர், ஆர்.எஸ்புரம் உள்ளிட்ட தெருக்களில் தொடர்ந்து 13 வது நாளாக இல்லம் தோறும் விலையில்லா காய்கறி தொகுப்புகளை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் வி.அருள்ஜோதி, பொன்மலை பகுதி செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் , பொன்மலை முன்னாள் கோட்டத்தலைவர் என்.மனோகரன், அமராவதி கூட்டுறவு சங்க தலைவர் ஏர்போர்ட் விஜி, 60A வட்ட கழக செயலாளர் எஸ்.ராஜா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications