லால்குடியில் ஷாக்.. பூனையை கண்டாலே ஆகலை.. விஷம் வைத்து 10 பூனைகளை சாகடித்த அமமுக பிரமுகர்!

பூனைகளை விஷம் வைத்து கொன்றுள்ளார் அமமுக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பூனைகள் மேல் கோபம்.. பார்த்தாலே கடுப்பானது.. அதனால் 10 பூனைகளை விஷம் வைத்தே கொன்றுவிட்டார் அமமுக பிரமுகர் ஒருவர்.. இது தொடர்பாக அவரை லால்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் சாலை பகுதியை சோ்ந்தவா் ஜெயந்த் முரளி.. 49 வயதாகிறது.. புர் உத்தமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார்.. மயக்கவியல் மருத்துவரும்கூட!

ammk person arrested for killing cats near lalkudi

இவருக்கு பூனைகள் என்றால் உயிர்.. அதனால் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளை வளா்த்து வந்தார்.. இவரது பக்கத்து வீட்டுக்காரர் பாலசுப்பிரமணியம்.. 54 வயதாகிறது.. லால்குடி நகர அமமுக செயலாளர் ஆவார்.

இந்த பூனைகள் வளர்ப்பது தொடர்பாக பாலசுப்பிரமணியனுக்கும், டாக்டருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.. பூனைகள் வளர்ப்பது பாலசுப்பிரமணியத்துக்கு பிடிக்கவில்லை.. அதனால் டாக்டருடன் பலமுறை வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது விஷம் வைத்து பூனைகளை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியன் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் டாக்டர் வீட்டிலிருந்த 10 பூனைகள் அப்பகுதியில் இறந்து கிடந்தன... மீதமுள்ள 10 பூனைகளையும் காணவில்லை.... இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்த் முரளி லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்... இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்..

ஆனால் சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த சம்பவம் லால்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+