முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Attack on Chief Minister Edappadi Palanisamys replacement vehicle while going to Trichy election campaign

நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்தார்,
இதனை தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மற்றும் திருவரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார், அங்கு மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மாற்று வாகனத்தை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் மாற்று வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+