வந்தே பாரத் மிஷனுக்கு சென்ற 2 பெண் விமானிகள்.. மீட்கப்பட்ட 350+ இந்தியர்கள்.. அசர வைக்கும் ஸ்டோரி!
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது.
திருச்சி: திருச்சியில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது. இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் பல்வேறு இந்தியர்களை மீட்கும் பணி மத்திய அரசால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்கு வந்தே பாரத் மிஷன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள்.
பல்வேறு மாநிலங்களுக்கு இவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வருகிறார்கள். இவர்களை 14 நாட்கள் தனியாக வைத்த பின், அரசு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பும்.

திருச்சி விமானம்
இந்த நிலையில் திருச்சியில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மதியம் மலேசியா சென்றது. கோலாலம்பூர் சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது. இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயர் கேப்டன் கவிதா ராஜ்குமார்.

பெண் விமானி
மிகவும் துணிச்சலாக அந்த பெண், பயணிகளை மலேசியா சென்று அழைத்து வந்துள்ளார். இவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த விமானத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணிகள் எல்லோரும் வெப்ப சோதனைக்கு பின் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலை துபாயில் இருந்து இதேபோல் இரண்டு விமானங்கள் சென்னை வந்தது.

கொச்சி மஸ்கட் விமானம்
மேலும் காலையில் 182 பயணிகள் கொண்ட விமானம் ஒன்று மற்றும் 177 பயணிகள் கொண்ட விமானம் ஒன்று இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதேபோல் இன்னொரு விமானம் கொச்சியில் இருந்து மஸ்கட் சென்று மீண்டும் கொச்சி திரும்பி வந்தது. நேற்று இரவு இந்த விமானம் திரும்பி வந்தது. இந்த விமானத்தில் 177 பயணிகள் வந்தனர். இந்த விமானத்தையும் பெண் விமானி ஒருவர்தான் ஓட்டி வந்தது.

விமானி பிந்து செபஸ்டியன்
பிந்து செபாஸ்டியன் என்ற பெண் விமானி இந்த விமானத்தை ஓட்டி வந்தனர். இவர் கேரளாவை சேர்ந்த பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்னொரு விமானம் நேற்று மதியம் மஸ்கட்டில் இருந்து திரும்பி வந்தது. இதில் 186 பயணிகள் வந்தனர். இன்னும் 4 நாட்கள் இதேபோல் கூடுதல் பயணிகள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications