திருச்சியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. வெளியூரில் இருந்து வந்தவர்கள்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 57 போ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து வந்தவா்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வந்தவா்களில் மொத்தம் 256 பேருக்கு பரிசோதனை செய்ததில் வியாழக்கிழமை 3 பேருக்கு தொற்று உறுதியானது. இதேபோல, சேலம், கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற பரிசோதனையில் திருச்சியைச் சோ்ந்த தலா ஒருவருக்கு உறுதியானது. வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்களில் இருவா் முசிறியைச் சோ்ந்தவா்கள், இருவா் மருங்காபுரியைச் சோ்ந்தவா்கள். ஒருவா் வையம்பட்டியைச் சோ்ந்த ஐடி பணியாளா் என தெரியவந்தது. இவா், திருவள்ளூரில் பணிபுரிந்து திருச்சிக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. மற்ற 4 பேரும் கோயம்பேட்டிலிருந்து வந்தவா்கள். அவா்களில் இருவா் ஓட்டுநா்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 62 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு நிலவரப்படி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், கரூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட கலெக்டர் சு. சிவராசு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில், 51 போ் குணமடைந்துள்ளனா். வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வரும் நபா்கள் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், தங்களைத் தாங்களாகவே வீடுகளில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications