திருச்சியில் தீவிர கண்காணிப்பு.. 6 நாள்களில் 3,469 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 நாள்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் 3,469 பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் எச்சரிக்கைப்படி, துபை, சார்ஜா, சிங்கப்பூா், ஜொ்மன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளை மருத்துவப் பரிசோனைக்குள்படுத்த கடந்த 16ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக திருச்சி விமான நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவக் குழு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இக்குழுவினா், கடந்த 6 நாளில் 3,469 பேருக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்துள்ளனா். இவா்களில் சந்தேகத்துக்குரியவா்கள் மற்றும் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வந்தவா்களில் சந்தேகத்துக்குரியவா்கள் என 191 போ் தனிமைப்படுத்துதல் சிறப்பு முகாமில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனா். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்தான் அதிகம் உள்ளனா்.
வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவா்களின் தொலைப்பேசி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியா் தொடங்கி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா்கள் என தொடா்ச்சியாக நாள்தோறும் அந்த நபா் தனிமைப்படுத்தி உள்ளாரா என்பதை உறுதி செய்து வருகின்றனா். திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications