முத்தரசனுக்கு நேற்று இரவு முதல் கடுமையான காய்ச்சல்.. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!
திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு முதல் கடுமையான காய்ச்சல் காரணமாக மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் முத்தரசன்.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமாகி வீடு திரும்பினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பலரும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications