முக்கிய அறிவிப்பு.. திருச்சியில் இருந்து நாளை முதல் மூன்று நாள்களுக்கு மலேசியாவிற்கு விமானம்
திருச்சி: திருச்சியில் தவித்து வரும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு மலேசியாவிற்கு விமானம் இயக்கப்படும் மலிண்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலிண்டோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன.இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பலர் சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர்.

இந்நிலையில், திருச்சியில் தவித்துவரும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் மூன்று நாள்கள் மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு இயக்கப்படும் மலிண்டோ விமானம் மூன்று நாள்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நேற்று வரை 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 271 களப்பணியாளர்கள் மூலம் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியில் இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் உடல் நலம் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications