மணப்பாறை அருகே மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டிய அரசு ஊழியர்
திருச்சி: மணப்பாறை அருகே அரசு ஊழியர் ஒருவர் பழமையான நெல் ரகமான மாப்பிள்ளை சம்பாவை பயிரிட்டு அதிகமகசூல் பெற்று விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
"உணவே மருந்து" என்ற இருந்த காலம் போய் தற்போது மருந்திற்காக உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு விதமான உரங்களை பயன்படுத்திதான், இன்றைய காலகட்டத்தில் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி பழமையான நெல் ரகங்கள் வெகுவாக குறைந்து விட்டதோடு, கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களும் மிக குறைந்த அளவே பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள இடையபட்டி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்.
கண்ணுடையான்பட்டி கிராம உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தன்னுடைய நிலத்தில் பழமையான மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகிறார். மாப்பிள்ளை சம்பா என்பது மிகவும் பழமையான நெல் வகையை சேர்ந்தது. அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இயற்கை விவசாயம் செய்வது, பழமையான நெல்மணிகளை பயிரிடுவது போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்ட மகேந்திரன், ஒருவரிடம் மாப்பிள்ளை சம்பா நெல் விதைகளை வாங்கி பயிரிட்டார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்பட்டதுடன், அதிக மகசூலும் கிடைத்துள்ளது.
மேலும் இந்த நெல்லின் மகத்துவத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல, தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து, நண்பர்களுக்கு விருந்தும் வைக்கிறார். பழமையான நெல்வகைகளை மீட்டு எடுக்க நினைத்துள்ள மகேந்திரனின் செயல் அப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications