நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
திருச்சி: நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான்.. நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு, இந்த போக்கு மாற வேண்டும்.. கோர்ட்டுகள், நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
திருச்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் பொன்விழா கருத்தரங்கம் ஜனவரி 4ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசும் போது, நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என நம் நாட்டில் கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்டும். நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும்.
நீதிபதிகளுக்கு பிரத்தியேக போலீஸ் பாதுகாப்பு என்பது தேவையில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் ஆகிறது. நீதிபதியின் செயல்பாட்டை அவர் அளித்த வழக்குகளின் தீர்ப்பின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்கிற்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
சில குற்ற வழக்குகளை விசாரிக்க மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. சில நீதிபதிகள் இரவு வரை கூட நீதிமன்றத்தில் வேலை செய்கின்றனர். நீதிபதிகளுக்கு எதிராக எந்த சோதனையும் நடைபெறாது என்ற தைரியத்தில் ஏற்கனவே இருந்த 2 நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதாக தகவல்கள் இருக்கின்றன. நீதிபதிகள் தங்கள் பணி நேரத்தில் முழுமையாக கடமை ஆற்ற வேண்டும்" இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தரங்கில் பேசினார்.
முன்பு ஒரு முறை விழாவில் ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசும் போது, நம் வாழ்க்கையில் கவனச் சிதறலுக்கு வழிவகுக்கும் விஷயங்களை தியாகம் செய்தாலே போதும். குடி உள்ளிட்ட கெட்ட விஷயங்களை தியாகம் செய்தால் நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும். தியாகிகளின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications