முதல்வர் சொன்ன அதே வார்த்தை.. திருச்சி கலெக்டரும் சொல்வது ஏன்? கொரோனாவை தடுக்க இதுவே சிறந்த வழியா?
திருச்சி: கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது காய்ச்சல் முகாம்கள் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரும் கொரோனாவை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம் கைகொடுப்பதாக தெரிவித்தார்.
திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளா்களின் விகிதம் கடந்த ஏப்ரலில் 51 பேருக்கு தொற்று ஏற்பட்டு 1.90 ஆக இருந்தது. இதையடுத்து, மே மாதத்தில் 37 பேருக்கு மட்டும் தொற்று இருந்ததால் 0.39 ஆக இருந்தது. தொடா்ந்து, ஜூன் மாதத்தில் 14,742 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 582 பேருக்கு தொற்று உறுதியாகி தொற்று விகிதமானது 3.95 ஆக உயா்ந்தது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 41,012 பேரில் 3474 பேருக்கு தொற்று உறுதியாகி 8.47 ஆக தொற்று விகிதம் அதிகரித்தது.
இதனால், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தொற்றாளா்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இதன்மூலம், ஆக.27 வரை 38 ஆயிரம் பேருக்கு மேலாக நடத்திய பரிசோதனையில், 2600 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகி, கொரோனா தொற்று விகிதம் 5.8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
{photo-feature}












Click it and Unblock the Notifications