எப்படி இருந்த திருநாவுக்கரசர் இப்படி மாறிவிட்டார்... எதிரொலிக்கும் அதிருப்தி குரல்கள்
திருச்சி: திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசரின் நடவடிக்கைகளால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
கொரோனா கால நிவாரணப் பணிகளில் திருநாவுக்கரசர் போதிய அக்கறையும், கவனமும் காட்டவில்லை என்பதே அவர்களின் புகாராக உள்ளது.
திருநாவுக்கரசரின் திடீர் அமைதிக்கான காரணம் தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

துணை சபாநாயகர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் இருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் துணை சபாநாயகராகவும் இருந்திருக்கிறார். அதுவும் 27 வயதில் யாரும் அடைய முடியாத உயர் பதவியை இவர் அடைந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த இவர், தனிக்கட்சி, பாஜக, காங்கிரஸ், என பல அவதாரங்களை எடுத்ததால் நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வந்தார்.

மாநில அரசியல்
ஒரு காலத்தில் புதுக்கோட்டை என்றாலே திருநாவுக்கரசர் பெயர் தான் மக்களுக்கும் சரி, அரசியல் தலைவர்களுக்கும் சரி நினைவுக்கு வரும். அந்தளவு அந்த மாவட்டத்தில் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்த அவர் தேசியக் கட்சிகளில் இணைந்து மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியதால் சொந்த மாவட்ட மக்கள் மத்தியில் தொடர்பை அறுத்துக்கொண்டார்.

ஆர்வமில்லை
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு இப்போது சிட்டிங் எம்.பியாக உள்ளார். கொரோனா கால நிவாரணப் பணிகளில் திமுக காட்டும் அக்கறையை திருநாவுக்கரசர் காட்டவில்லை என்பதே அவர் மீது உள்ள முதல் புகாராகும். ஓரிரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைத்ததோடு சரி தனிப்பட்ட முறையில் அவர் நிவாரணம் வழங்க ஏனோ ஆர்வம் காட்டவில்லை எனக் கூறுகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

வெடிக்கும் திமுகவினர்
இதனிடையே திருச்சி மாவட்ட திமுகவினரோ, இவரை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தோம், ஆனால் என்ன பயன் இந்த தருணத்தில் அவர் இப்படி அமைதி காப்பது நல்ல பண்பல்ல என வெடிக்கின்றனர். திருநாவுக்கரசரின் பழைய நடவடிக்கைகளுக்கும், அணுகுமுறைகளுக்கும், தற்போதைய செயல்பாடுகளுக்கும் பெரியளவில் மாற்றம் உள்ளதாக கூறுகின்றனர். இதுவரை அவர் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த நிவாரண உதவிகளும் தர வில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாற்றம்
மேலும், இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவிப்பதாவது; ''ஒரு காலத்தில் உதவி செய்வதில் திருநாவுக்கரசரை யாரும் அடித்துக்கொள்ள முடியாது, ஆனால் இப்போது என்னவென்றால் எல்லாம் தலைகீழாக உள்ளது. ஊரடங்கால் வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் கட்சிக்காரர்களுக்கு கூட அவர் உதவி செய்யாதது மிகுந்த கவலையளிக்கிறது'' எனக் கூறினார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் திடீரென தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்! பதறிய போலீஸ்! ட்விஸ்ட்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications