பெரிய கூட்டமே இருக்கு.. 16 பேரிடம் தீவிர விசாரணை.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அடுத்தடுத்த திருப்பம்!
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பின் பெரிய கூட்டமே இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பின் பெரிய கூட்டமே இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த கொள்ளையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.
இது தொடர்பான விசாரணையை தற்போது போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், மாஸ்க் அணிந்து கொள்ளையடித்தது பெரிய வைரலானது.

எப்படி
இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக தற்போது 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தலைமறைவாக இருக்கும் முருகன்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவரின் உறவினர்கள் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சுரேஷ் உறவினர்
அதேபோல் சுரேஷ் என்ற கொள்ளையனின் உறவினர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்கம் திருடப்பட்டது. இந்த 30 கிலோ தங்கத்தை யாரிடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

என்ன கேள்வி
அதை யாரிடம் எல்லாம், எப்படி பிரித்து கொடுத்து இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சிலரிடம் இருந்து சில கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதில் முருகனிடம்தான் அதிகமாக நகை இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மிக தீவிரம்
இதனால் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களுக்கு பின் பெரிய கூட்டமே திட்டம் போட்டு இயங்கி இருக்கிறது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications