சிறைக்குள்ளும் பரவிய கொரோனா.. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு தொற்று உறுதி
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகள் பலர் பரோலில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைதி ஒருவர், கடந்த 2015-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் உள்பட 5 பேர் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி, அதாவது ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே சென்னை புழல் சிறைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, தண்டனை காலம் முடிந்த பின்னர், திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும், சுயதொழில் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 22-ந்தேதியன்று, சென்னை புழல் சிறையில் இருந்து 5 பேரும் பயிற்சி முடித்து திருச்சி மத்திய சிறைக்கு திரும்பினர். இங்கு 5 பேருக்கும், சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்களில் திண்டுக்கல் ஆயுள் தண்டனை கைதிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 4 பேருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications