திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா.. ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நவம்பர் 2022க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023இல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வில் நிறைஞர், பட்டயம், பட்ட சான்றிதழ் படிப்பு படித்த மாணவர்களுக்கு இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையம் வரும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications