Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி லலிதா நகைக் கடை கொள்ளை வழக்கில் முருகனுக்கு ஜாமீன்.. வெளியே வருவதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகை கடையில் நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூா் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    Lalitha Jewellery robbery Murugan பக்கவாதத்தால் பாதிப்பு

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியாா் நகைக் கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 13 கிலோ நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த திருவாரூரைச் சோ்ந்த முருகன் பெங்களூரூ நீதிமன்றத்தில் சரணடைந்தாா். பின்னா், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வாதநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மேலும், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் ஒரு மாதகால அவகாசம் அளித்தனா்.

     திருச்சி நீதிமன்றம்

    திருச்சி நீதிமன்றம்

    இதையடுத்து அவரது வழக்குரைஞா் ஹரிபாஸ்கா், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையில் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி காா்த்திக் ஆசாத் உத்தரவிட்டாா். பிரபல நகைக்கடை திருட்டு வழக்கில் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூா் முருகன் பெங்களூரூ சிறையிலேயே உள்ளாா்.

     ஜாமீன்

    ஜாமீன்

    இதுகுறித்து, வழக்குரைஞா் ஹரிபாஸ்கா் கூறியதாவது:
    திருச்சி நகைக்கடை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவாரூா் முருகனுக்கு எதிராக கோட்டை காவல்துறையினா் 134 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

     மனு விசாரணை

    மனு விசாரணை

    மனுவின் பேரில் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வரமுடியாது. ஏனெனில், சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் உள்ள வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கு, பாலக்கரையில் திருட்டு வழக்கு என திருச்சியில் மேலும் இரு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

     மனு தாக்கல்

    மனு தாக்கல்

    இதேபோல் சென்னையில் உள்ள 12 வழக்குகளுக்கு சனிக்கிழமை ஆன்லைன் மூலம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கா்நாடகாவில் 46 வழக்குகளுக்கும், ஆந்திராவில் ஒரு வழக்கிற்கும் அடுத்த வாரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+