லலிதா ஜுவல்லரி கொள்ளை.. ஒருத்தனையும் விட கூடாது.. மொத்தமா பிடிக்கணும்.. தீவிர வேட்டையில் போலீஸ்
திருச்சி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Recommended Video
திருச்சி: திருச்சியை உலுக்கிய லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை தமிழகத்தையே பதற வைத்துள்ளது. ஒட்டுமொத்த திருச்சி காவல்துறையும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதால் நகரமே பரபரப்பாக உள்ளது.
லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் தரைத் தளத்தில் உள்ள ஒரு ஷோகேஸை கூட திருடர்கள் விடவில்லை. மொத்தமாக காலி செய்து விட்டனர். வட இந்தியாவில் நடைபெறும் திருட்டு போல இது இருப்பதால் வட இந்தியக் கொள்ளையர்கள்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நடந்த கொள்ளை போலவே இதுவும் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

சூறை
திருச்சியை உலுக்கி எடுத்துள்ளது லலிதா ஜுவல்லரி கடையில் நடந்த துணிகர கொள்ளை. மொத்த கடையையேயும் சூறையாடி விட்டனர் கொள்ளையர்கள். குழந்தைகள் போடும் மாஸ்க்கை போட்டபடி வந்து கொள்ளையடித்து சிசிடிவி கேமராவையும் கலாய்த்துள்ளனர். இந்தக் கொள்ளை தொடர்பாக போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

வேட்டை
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தனிப்படைகளை அமைத்து தானே முன்நின்று விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். கடையை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டுள்ளனர். மொத்த திருச்சி காவல்துறையும் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரமாக களம் இறக்கி விடப்பட்டுள்ளது.

சோதனை
திருச்சி புறநகர் எஸ்பியும் களத்தில் குதித்துள்ளார். திருச்சி நகரை விட்டு வெளியேறிய சந்தேகத்திற்குரிய வாகனங்களை கண்டுபிடிக்க டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கடை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் தீவிரமாக ஆராயப்படுகின்றன.

ஹோட்டல்கள்
திருடர்கள் ஏதாவது துப்பை விட்டுச் சென்றுள்ளனரா என்றும் தீவிரமாக ஆராயப்படுகிறது. நேற்று இரவும், இன்று காலையும் ஹோட்டல்களை காலி செய்தவர்கள் லிஸ்ட்டும் எடுக்கப்படுகிறது. அவர்கள் யார் என்ற விவரமும் சேகரிக்கப்படுகிறது. லலிதா ஜுவல்லரி கடை பகுதியில் சந்தேகப்படும்படியான வாகன நடமாட்டம் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

சந்தேகம்
லலிதா ஜுவல்லரி கடைக்கு சமீப காலத்தில் வந்தவர்கள் குறித்த சிசிடிவி பதிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அதில் யாரேனும் கடையை நோட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு உள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த திருச்சி காவல்துறையும் இந்த கொள்ளை சம்பவத்தை பெரும் சவாலாக எடுத்து அதி தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications