டிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்!
கார் விபத்தில் சிக்கியவரை மீட்டுள்ளார் காவலர் கணேஷ்
திருச்சி: "டிரைவர் இல்லையா.. பரவாயில்லை, சாவியை மட்டும் குடுங்க" என்று கேட்டு.. ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் கணேஷ்.. மனிதநேயம் தழைக்கும் இந்த சம்பவத்தையடுத்து கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள பகுதி புளியவலசு. இங்கு வசித்து வரும் தம்பதி தியாகராஜன் - சாந்தி.. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மாருதி காரில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றார்கள்.

தரிசனம் முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது, கரூர் சாலை புளியம்பட்டி பிரிவு அருகே கார் வந்தது.. அதே சமயம் மற்றொரு காரும் எதிரில் வந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள், கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறினார்.. இதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்தனர்.. தியாகராஜனின் கால்களை மீட்க போராடினர்.
அந்த சமயத்தில்தான் மூலனூர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் கணேஷ் வந்தார்.. அவரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.
அதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக சென்றார் கணேஷ்.. அப்போது "ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை" என்றார்கள்.. "பரவாயில்லை நானே ஓட்டுகிறேன், சாவியை மட்டும் குடுங்க" என்று சொல்லி வாங்கி உள்ளார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை, அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இப்போது தியாகராஜனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து.. அசுர வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஆனால், தியாகராஜனை மீட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்வரை கணேஷ் ஒரு போலீஸ்காரர் என்றே யாருக்குமே தெரியாதாம்!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications