டிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்!
கார் விபத்தில் சிக்கியவரை மீட்டுள்ளார் காவலர் கணேஷ்
திருச்சி: "டிரைவர் இல்லையா.. பரவாயில்லை, சாவியை மட்டும் குடுங்க" என்று கேட்டு.. ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் கணேஷ்.. மனிதநேயம் தழைக்கும் இந்த சம்பவத்தையடுத்து கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள பகுதி புளியவலசு. இங்கு வசித்து வரும் தம்பதி தியாகராஜன் - சாந்தி.. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மாருதி காரில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றார்கள்.

தரிசனம் முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது, கரூர் சாலை புளியம்பட்டி பிரிவு அருகே கார் வந்தது.. அதே சமயம் மற்றொரு காரும் எதிரில் வந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள், கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறினார்.. இதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்தனர்.. தியாகராஜனின் கால்களை மீட்க போராடினர்.
அந்த சமயத்தில்தான் மூலனூர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் கணேஷ் வந்தார்.. அவரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.
அதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக சென்றார் கணேஷ்.. அப்போது "ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை" என்றார்கள்.. "பரவாயில்லை நானே ஓட்டுகிறேன், சாவியை மட்டும் குடுங்க" என்று சொல்லி வாங்கி உள்ளார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை, அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இப்போது தியாகராஜனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து.. அசுர வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஆனால், தியாகராஜனை மீட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்வரை கணேஷ் ஒரு போலீஸ்காரர் என்றே யாருக்குமே தெரியாதாம்!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications