அந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்!
நடிகை நெருங்கி பேசியதால் நகை தந்தோம் என்று சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான்
Recommended Video
திருச்சி: "அந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் நகையை எடுத்து தந்துட்டோம்" என்று கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலமாக தந்துள்ளானாம். ஆனால் அந்த நடிகை, இந்த நடிகை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரை சொல்லி குழப்பி தள்ளுகிறானாம்!
முருகன் கொள்ளையடித்ததை முழுக்க முழுக்க சினிமாவில் போட்டதுடன், ஐதராபாத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளான். புதுசா குடி வந்திருப்பது யார் என்று அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அவர்களிடம் நான் ஒரு புரொடியூசர், இனிமே எமக்கு இந்த ஐதராபாத் தான் கடைசிவரை என்று சொல்லி நட்பாக பேச ஆரம்பித்துவிடுவானாம்.

படம் எடுக்கும்போது நிறைய ஹீரோக்களை போய் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் எல்லாருமே லட்சம், கோடிகளில் சம்பளம் கேட்டதால்தான், அக்கா பையன் சுரேஷை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முடிவு செய்தான் முருகன்.
2 படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டு, அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தபோதும், நடிகைகளிடம் ஜாலியாக இருந்தது கொஞ்சம் கூட குறையவில்லை. தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்த மாமாவும், மருமகனும் பணத்தை கொட்டி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.
கால்ஷீட் இல்லை என்று நடிகை எங்களுக்கு சொல்லிவிட்டார். ஆனால், நாங்கள் நகைக்கடை வைத்திருக்கிறோம் என்று சொன்னதுமே நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார். கொள்ளையடித்த ஒரு நகையை தந்ததும் மறுக்காமல் வாங்கி கொண்டார், ஆனால் அதற்கு பிறகு அந்த நடிகையை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை என்று சுரேஷ் சொல்லி உள்ளான்.
ஆனால், அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுரேஷ் நடிகைகள் பற்றி சொன்ன இந்த வாக்குமூலங்கள் எல்லாமே உண்மைதானா என்பதை முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் மொத்தமாக தெரியவரும்.
எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், சம்மந்தப்பட்ட நடிகைகளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிக்க உள்ளனர். அது மட்டும் இல்லை.. நாம இப்படி இருந்தால் இந்த கவர்ச்சிகர சினிமா உலகம் தன்னை மதிக்காது என்று எண்ணி அப்போதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற முடிவுக்கு வந்துள்ளான். அதன்படியே லட்சக்கணக்கில் பணம் செலவழித்து சர்ஜரியும் செய்து கொண்டான்.
ஏராளமான கொள்ளையடித்த நகைகள் தம்மிடம் இருப்பதால், இதை காட்டியே சம்பந்தப்பட்ட நடிகைகளை விழ வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் அந்த நடிகைகள் யார் என்பதை போலீசார் லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அதனால், இந்த கேடிகளுடன் தொடர்பில் இருந்த நடிகைகளின் அடி வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications