ப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிமுகவுக்கு வாக்களித்த விவகாரத்தில் தலைவர்களை குறை கூறுவது முறையல்ல என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் கட்சிமாறி வாக்களித்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றவர்களில் சிலர் தங்கள் உறவினர்களுக்கு மறைமுகத் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்றும், இதற்கு ப.சிதம்பரத்தையோ, கே.எஸ்.அழகிரியையோ குறை சொல்ல தேவையில்லை எனத் தெரிவித்தார்.

தொகுதி உலா
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான திருநாவுக்கரசர் தனது தொகுதிகுட்பட்ட புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணி, காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

முற்றுப்புள்ளி
புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவுக்கு வாக்களித்தது பற்றி மழுப்பலாக பதில் கூறிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சனைக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எனக் கூறினார்.

எனது ஆசை
திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், கூட்டணி விவகாரத்தில் எழுந்த பிரச்சனையை ஸ்டாலின் தீர்த்துவிட்டதால் அதைப்பற்றி பேச ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.

அறிவுரை
காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பாக பாஜக எனும் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் அதிமுகவை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் சிந்திக்க வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி.கடுகடுத்தார்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications