திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹெச்ஒடி அதிரடியாக கைது.. மாணவிகள் புகாரால் 5 பிரிவில் வழக்கு!
திருச்சி : திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டதால் அவரை திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் மீது ஐந்து மாணவிகள் பாலியல் சீண்டல் புகார் கொடுத்தனர். இந்த புகாரையடுத்து சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீதான புகார் குறித்து மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் 7 பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை அடிப்படையில் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின பேரின் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்ததாக புகார் கூறப்படும் மற்றொரு பேராசிரியர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications