ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ரத்தக்களறி.. அண்ணாமலை கண்டனம்.. அறநிலையத்துறைக்கு எதிராக போராட்டம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பக்தர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது விஐபிக்கள் சிலர் கோவிலுக்குள் சென்றதாக தெரிகிறது. அப்போது பக்தர்கள் சில வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் போது விஐபிக்களை மட்டும் ஏன் விடுகிறீர்கள் என்று ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து காவலாளிகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சண்டையாக மாறியது. இதில் காவலாளி தாக்கியதில் ஐயப்ப பக்தரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கோவில் வளாகத்தில் அதுவும் ஸ்ரீரங்கநாதர் கோவில் மூலஸ்தனம் முன்பாக ரத்தம் சிந்தியதால் கோவில் நடை மூடப்பட்டது. பின்னர் பரிகார பூஜைக்குப் பிறகு கோவில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
A government which has no faith in Hindu Dharma has no business to be in Hindu Temples.
— K.Annamalai (@annamalai_k) December 12, 2023
The Iyyappa devotees who have had 42 days of Vrath, with all devotion, wanted to pray to Ranganatha Swamy after their return from Sabarimala.
The Iyyappa devotees questioned the long wait… pic.twitter.com/4BbNii9La5
42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும், சன்னதி அருகே தாக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு சிகிச்சை அளித்ததையும் கேள்வி எழுப்பினர் மற்றும் இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் திமிர். கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications