போலீசாரின் பிடியில் மஞ்சுளா.. கொள்ளையன் முருகனை பற்றி என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ.. விறுவிறு விசாரணை
முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Recommended Video
திருச்சி: முருகனை பற்றி என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ மஞ்சுளா.. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு சம்பந்தமாக முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் ஓட்டையை போட்டு, ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிகண்டனுடன் பைக்கில் வந்து தப்பியோடிய சுரேஷ் பின்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார். முக்கிய குற்றவாளியான முருகனும் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தனர்.

பறிமுதல்
இப்போது, இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி
இந்த நிலையில் திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்காக மஞ்சுளாவை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடை
ஒவ்வொரு இடத்தில் கொள்ளை அடிக்கும்போதும், முருகன் மனைவி, குடும்பத்துடன்தான் அந்தந்த பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்திருக்கிறான். மேலும் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பந்தமாக போலீசார் விசாரிக்கும்போது, மனைவியுடன் நகைக்கடைக்கு சென்று நோட்டமிட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. அதனால், மஞ்சுளாவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

மஞ்சுளா
முருகன் இதுவரை கொள்ளையடித்த நகைகளை வேறு எங்காவது பதுக்கியுள்ளாரா? சொத்துக்கள் ஏதும் வாங்கியுள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications