"பீரங்கி" மூலம் கிருமிநாசினி.. வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர் வெல்லமண்டி!
திருச்சி: கொரோனா பரவுதலைத் தடுக்கும் நோக்கில் திருச்சி மாநகர பகுதியில் இன்று காலை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீதிவீதியாகச் சென்று பீரங்கியை போன்று காட்சியளிக்கும் கருவி மூலம் கிருமிநாசினி தெளித்தார்.
Recommended Video
கொரோனா பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் முக்கியச் சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பீரங்கி
அதேபோல் இன்று காலை திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சாலையில் கொரோனா நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியை அவரே தெரு தெருவாகவும் கடைவீதியாகவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெளித்தார். பீரங்கி போல் இருந்த கருவி மூலம் கிருமிநாசினி தெளித்தார்.

அமைச்சர்
வேட்டியை மடித்துக் கொண்டு அமைச்சர் கொரோனாவுக்கு எதிராக களமிறங்கினார். திருச்சி மாநகர பகுதியில் உள்ள என்.எஸ்.பி. சாலை, பெரிய கடை வீதி, மேல பொலிவார் சாலை, காந்தி மார்க்கெட், வெல்லமண்டி, வெங்காய மண்டி, வான பட்டறை மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

அமைச்சரே தெளித்தார்
இதில், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு கை தெளிப்பான், சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமிநாசினி தெளித்தார். இந்தத் தூய்மைப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாராட்டு
பின்னர் அமைச்சர் தூய்மை பணியாளர்கள் பணி எப்போதும் தன்னலம் கருதாது செய்து வருகிறார்கள். அவர்களை உற்சாகம் படுத்த வேண்டும் நோக்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து உற்சாகபடுத்தினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications