Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடியில் கள்ள ஓட்டு முயற்சி.. தேர்தலை புறக்கணித்த கிராமத்தில் நுழைந்த கும்பல்! சிக்கிய 4 பேர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தலை புறக்கணித்த கிராமத்தில் நுழைந்து கள்ள ஓட்டு போட முயன்ற 4 பேரை கிராம மக்கள் பிடித்தனர். மேலும் அவர்களை அழைத்து சென்ற போலீசாரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை லோக்சபா தேர்தல் நடந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில பூத்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் என சிறு இடையூறுகள் ஏற்பட்டன.

4 people who tried to cast fake votes in Thoothukudi were arrested

இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்தனர். அதாவது பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த ஆலைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தமிழக மீனவ துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிராமத்துக்கு வந்த நிலையில் அவரையும் மக்கள் திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து கிராம மக்கள் அந்த கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அமர்ந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் திடீரென இன்று பிற்பகல் கிராமத்துக்குள் கார் ஒன்று சென்றுள்ளது. அவர்கள் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. அதாவது கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் அவர்களின் ஓட்டுகளை இந்த கும்பல் கள்ள ஓட்டாக பதிவு செய்ய முயன்றுள்ளது.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். 4 பேர் சிக்கினர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் நால்வரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். இந்த வேளையில் அவர்களின் கார் உள்ளிட்டவற்றை சரியாக சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பொதுமக்கள் போலீஸ் வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கள்ள ஓட்டு போட வந்த கும்பலின் காரில் சோதனையிட்டனர். அப்போது மதுபான பாட்டில்கள், கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்டவை இருந்தது. இதனால் அவர்கள் 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த வேளையில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு போலீசார் அவர்கள் 4 பேரையும் அழைத்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+