5 சவரன் தங்கம்.. கடலில் மூழ்கி தேடி கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் & கடல் பாதுகாப்பு படையினர்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் நீராடும்போது பெண் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சேர்ந்து கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி மற்றும் உடன்பிறந்த தங்கையான வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும், திருச்செந்தூர் கடலில் புனித நீராடி உள்ளனர். அப்போது வாசுகி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போனது. இதனால் அதிர்ந்து போன வாசுகி உடனடியாக தன்னோடு வந்திருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே கார்த்திக் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
காவலர்கள் உடனடியாக கடல் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர் சிவராஜா தலைமையிலான குழுவினர், கடலில் தொலைந்து போன தங்க சங்கலியை சல்லடை போட்டுத் தேடினர்.
அப்போது கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் கையில் தங்கச் சங்கிலி சிக்கியது. தங்கச் சங்கிலியை, கடல் பாதுகாப்பு பணியாளர் உடனடியாக வேலுச்சாமி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் வாசுகியின் தங்க சங்கிலியை அவரது சகோதரி ஜோதியிடம் காட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த வாசுகியின் தங்க சங்கலி இதுதானா என்று உறுதிப்படுத்திய பின்பு வாசுகியியம் ஒப்படைத்தனர்.
5 சவரன் தங்கச் சங்கிலி, கடலில் நீராடியபோது காணாமல் போனதால், தவித்த நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் சேர்ந்து தேடி, தனது செயினை மீட்டுக் கொடுத்ததால் வாசுகி அவர்களுக்கு நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். திருச்செந்தூர் கடலில் நீராட வந்த பக்தர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 5 சவரன் தங்கச் செயினின் இன்றைய மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் நிலையில், கடலில் தொலைந்து மீட்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications