எப்போதும் இல்லாத வகையில்.. இந்த வருஷம்தான் ரொம்ப அவதி.. பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் குமுறல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் பரிசு வாங்க 6 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்யப்பட்டுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்தனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 16 ஆயிரத்து 40 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 28 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடை உள்ளது. இதில் 4500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டது.

நியாய விலைக் கடை
இதைத் தொடர்ந்து இன்று போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காலை 8 மணி முதல் ஆண்கள், பெண்கள் என திரண்டனர். ஆனால், மதியம் 1.30 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் ஆன்லைனில் ஏற்ற தாதமதம் ஏற்பட்டது.

6 மணி நேர காத்திருப்பு
இதனால் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க வந்தவர்கள் சுமார் 6 மணி நேர காத்திருப்பிற்கு பின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சார்ந்த உஷா ராணி என்ற பெண்மணி கூறுகையில், உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த 6 மணி நேரமாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காத்திருந்தேன்.

வயதானவர்கள்
வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். முதலில் தாமத்திற்கு நெட்டில் வேஷ்டி சேலை ஏறவில்லை என முதலில் சொன்னார்கள். பின்னர் சென்னையில் முதல்வர் வழங்கிய பின்பு வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்தது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications