எப்போதும் இல்லாத வகையில்.. இந்த வருஷம்தான் ரொம்ப அவதி.. பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் குமுறல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் பரிசு வாங்க 6 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்யப்பட்டுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்தனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 16 ஆயிரத்து 40 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 28 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடை உள்ளது. இதில் 4500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டது.

நியாய விலைக் கடை
இதைத் தொடர்ந்து இன்று போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காலை 8 மணி முதல் ஆண்கள், பெண்கள் என திரண்டனர். ஆனால், மதியம் 1.30 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் ஆன்லைனில் ஏற்ற தாதமதம் ஏற்பட்டது.

6 மணி நேர காத்திருப்பு
இதனால் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க வந்தவர்கள் சுமார் 6 மணி நேர காத்திருப்பிற்கு பின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சார்ந்த உஷா ராணி என்ற பெண்மணி கூறுகையில், உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த 6 மணி நேரமாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காத்திருந்தேன்.

வயதானவர்கள்
வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். முதலில் தாமத்திற்கு நெட்டில் வேஷ்டி சேலை ஏறவில்லை என முதலில் சொன்னார்கள். பின்னர் சென்னையில் முதல்வர் வழங்கிய பின்பு வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்தது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications