7 தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது - முதல்வர் பழனிச்சாமி
ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது வேறு, விடுதலை விவகாரம் வேறு என்றும
தூத்துக்குடி: ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது வேறு, விடுதலை விவகாரம் வேறு என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதல்வருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரூ.54.22 கோடியில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை முதல் மீண்டும் சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என்றார்.
பள்ளிகள் திறப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த முதல்வர், நேற்று தான் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கையின் படி முடிவு எடுக்கப்படும் என்றார்.

7 பேர் விடுதலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, ஏழு பேர் விடுதலை என்பது வேறு, கல்விக்கான உள் ஒதுக்கீடு என்பது வேறு! 7பேர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் நோய் பரவல் படிப்படியாக குறைந்து உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. கேரளா சென்று திரும்பும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications